/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோரிக்கைகளை நிறைவேற்ற செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
/
கோரிக்கைகளை நிறைவேற்ற செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 22, 2024 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கம் சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தலைவர் பால்பாண்டியன் தலைமை வகித்தார்.
மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனைகளில், 5 முதல் 10 ஆண்டு கால இடைவெளியில் செவிலியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கு, உரிய கால இடைவெளியில் பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை.
ஒப்பந்த செவிலியர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
- நமது நிருபர் -