sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'கருணை, கண்ணியத்துடன் செவிலியர்கள் சேவையாற்றணும்'

/

'கருணை, கண்ணியத்துடன் செவிலியர்கள் சேவையாற்றணும்'

'கருணை, கண்ணியத்துடன் செவிலியர்கள் சேவையாற்றணும்'

'கருணை, கண்ணியத்துடன் செவிலியர்கள் சேவையாற்றணும்'


ADDED : ஜூலை 04, 2025 10:58 PM

Google News

ADDED : ஜூலை 04, 2025 10:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; மதுக்கரை, நைட்டிங்கேல் கல்விக்குழுமம் சார்பில், அன்னை மீனாட்சி மற்றும் நைட்டிங்கேல் நர்சிங் கல்லுாரிகளில் தேர்ச்சி பெற்ற செவிலிய பட்டதாரிகளுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. நைட்டிங்கேல் கல்விக் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் மனோகரன் தலைமை வகித்தார்.

மத்திய அரசின் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜுவல் ஓரம், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவியருக்கு பட்டங்களை வழங்கி, கவுரவித்தார்.

அவர் பேசுகையில், ''பட்டப்படிப்பால் உங்களது வாழ்வை மட்டுமின்றி, ஒட்டுமொத்த சமுதாயத்தையும் முன்னேற்ற வேண்டும். கருணையுடனும், கண்ணியத்துடனும் நோயாளிகளுக்கு செவிலியர்கள் சேவையாற்ற வேண்டும்,'' என்றார்.

விழாவில், 400க்கும் மேற்பட்ட மாணவியர் பட்டங்களையும், பதக்கங்களையும் பெற்றனர். முன்னாள் மத்திய கல்வியமைச்சர் சஞ்சய் பசுவான், நடராஜ் மருத்துவமனை இயக்குனர் நடராஜ், நைட்டிங்கேல் கல்வி குழும செயலாளர்கள் ராஜீவ், சந்தியா, சஞ்சய் மணி, மீனா மற்றும் கல்லுாரி முதல்வர்கள் துணை முதல்வர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us