sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோரிக்கை அட்டை  அணிந்து பணியாற்றிய செவிலியர்கள்

/

கோரிக்கை அட்டை  அணிந்து பணியாற்றிய செவிலியர்கள்

கோரிக்கை அட்டை  அணிந்து பணியாற்றிய செவிலியர்கள்

கோரிக்கை அட்டை  அணிந்து பணியாற்றிய செவிலியர்கள்


ADDED : ஜன 08, 2024 11:14 PM

Google News

ADDED : ஜன 08, 2024 11:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அரசு மருத்துவமனை செவிலியர்கள், கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர்.

தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து நேற்று முதல், 12ம் தேதி வரை பணியாற்றுவது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பணியாற்றும், 65 செவிலியர்கள், கோரிக்கை அட்டை அணிந்து தங்களது பணிகளை மேற்கொண்டனர்.

பணி மூப்பு பட்டியலில் உள்ள செவிலியர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். செவிலியர்களுக்கு எவ்வித பதவி உயர்வுமின்றி செவிலியர்களாகவே பணி ஓய்வு பெற்று செல்வதை தடுத்திட வேண்டும்.

பதவி உயர்வு பெறும் நிரந்தர செவிலியர் காலிப்பணியிடங்களில், எம்.ஆர்.பி., ஒப்பந்த செவிலியர்களை நிரந்தர செவிலியர்களாக பணியமர்த்த வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோரிக்கை அட்டை அணிந்து செவிலியர்கள் பணியாற்றினர்.






      Dinamalar
      Follow us