sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அஞ்சல் அலுவலகம் முன் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் அவதி

/

அஞ்சல் அலுவலகம் முன் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் அவதி

அஞ்சல் அலுவலகம் முன் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் அவதி

அஞ்சல் அலுவலகம் முன் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் அவதி


ADDED : ஜன 05, 2024 11:13 PM

Google News

ADDED : ஜன 05, 2024 11:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்:அஞ்சல் அலுவலகம் முன்புள்ள இடத்தில், ஆக்கிரமிப்பு செய்து கடைகளை வைத்ததால், அலுவலகத்திற்கு வரும் பொது மக்கள், வாகனங்களை நிறுத்த இடம் இல்லாமல், ரோட்டில் நிறுத்தி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையத்தில், தலைமை அஞ்சல் அலுவலகம், காரமடை சாலையில் உள்ளது. இந்த அலுவலகத்தின் முன் ஏராளமான காலியிடம் உள்ளது. பல்வேறு பணிகளுக்காக தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.

அலுவலகத்தின் முன், காரமடை சாலையில் உள்ள காலியிடங்களில், கார் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி வந்தனர். காலப்போக்கில் இந்த இடத்தை, காய்கறி கடை, பனியன் கடை, கரும்பு ஜூஸ் கடை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்துள்ளனர்.

இதனால் அஞ்சல் அலுவலகத்திற்கு வாகனங்களில் வரும் பொதுமக்கள், தங்கள் வாகனங்களை நிறுத்த, இடம் இல்லாததால், காரமடை சாலையில் நிறுத்தி செல்ல வேண்டிய, நிலை ஏற்படுகிறது.

இது குறித்து அஞ்சலக அதிகாரிகள் கூறியதாவது: அஞ்சல் அலுவலகத்தில், 50க்கும் மேற்பட்ட அலுவலர்கள், பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் தங்கள் வாகனங்களை அலுவலகத்தில் உள்ளே நிறுத்துவதால், பொதுமக்களின் வாகனங்கள் உள்ளே நிறுத்துவதற்கு, இடவசதி இல்லை. அதனால் அஞ்சல் அலுவலக காம்பவுண்ட் சுவற்றின் ஓரம், சாலையில் உள்ள காலி இடத்தில், பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தி வந்தனர்.

தற்போது இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து, பலர் கடைகள் வைத்துள்ளனர். இதனால், தங்கள் வாகனங்களை நிறுத்த முடியாமல், வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

இது சம்பந்தமாக பலமுறை நகராட்சி அலுவலகத்திலும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் புகார் கூறினோம். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us