ADDED : பிப் 05, 2026 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஆக்டோ- ஜியோ, சார்பில் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப் பாட்டம் நடந்தது.
தி.மு.க. தேர்தல் வாக்குறுதி 309 மற்றும் 311-ன் படி, பழைய ஓய்வூதியத்தை கொண்டு வருவது, தொகுப்பூதியத்தில் பணியாற்றும் 50,000 சிறப்பாசிரியர்கள் மற்றும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தற்காலிக ஆசிரியர்களை நிபந்தனையின்றி பணி நிரந்தரம் செய்வது, காலியாக உள்ள சுமார் 4.5 லட்சம் அரசுப் பணியிடங்களை உடனடியாக நிரப்புவது உள்ளிட்ட, 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

