sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 போலி நகைக்கு கொடுத்த கடன் வசூலிக்க அதிகாரிகள் மெத்தனம்

/

 போலி நகைக்கு கொடுத்த கடன் வசூலிக்க அதிகாரிகள் மெத்தனம்

 போலி நகைக்கு கொடுத்த கடன் வசூலிக்க அதிகாரிகள் மெத்தனம்

 போலி நகைக்கு கொடுத்த கடன் வசூலிக்க அதிகாரிகள் மெத்தனம்


ADDED : டிச 12, 2025 05:03 AM

Google News

ADDED : டிச 12, 2025 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: துடியலுார் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபன உறுப்பினர்கள், கலெக்டர்,மாநில பதிவாளர், இணைப்பதிவாளர் உட்பட அதிகாரி களுக்கு அனுப்பியுள்ள மனு:

துடியலுார் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தில், பல மாதங்களுக்கு முன் போலி நகையின் பெயரில் பல கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின், போலி நகை அடமானம் வைத்த சார்லஸ், நகை மதிப்பீட்டாளர் கிருத்திகை ராஜ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், ஸ்தாபனத்தின் வாயிலாக வழங்கப்பட்ட, பல கோடி ரூபாய் நகை கடன் தொகை, அதற்கு இன்றைய தேதி வரை வட்டியும், அபராத வட்டியும் மற்றும் வசூல் செலவு தொகையும், கணக்கில் வரவு வைக்கப்படவில்லை; வசூல் ஆகவும் இல்லை.

காலம் கடந்து செல்ல, செல்ல ஸ்தாபனத்திற்கு வர வேண்டிய தொகை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஸ்தாபனத்திற்கு முழு தொகையும் வசூல் செய்து தர வேண்டியது, கூட்டுறவு துறையின் பொறுப்பாக இருப்பதால்,அதற்கான மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.






      Dinamalar
      Follow us