sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிறுமுகையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் அறிவுறுத்தல்

/

சிறுமுகையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் அறிவுறுத்தல்

சிறுமுகையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் அறிவுறுத்தல்

சிறுமுகையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் அறிவுறுத்தல்


ADDED : ஏப் 18, 2025 11:30 PM

Google News

ADDED : ஏப் 18, 2025 11:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்: சிறுமுகையில் மாநில நெடுஞ்சாலை துறையினரால், சாலையில் உள்ள ஆக்கிரமிப்புக்கள் அகற்ற, மைக் வாயிலாக அறிவுரை வழங்கப்பட்டது.

மேட்டுப்பாளையம்-சக்தி சாலையில் சிறுமுகை நால்ரோடு மற்றும் ஜங்ஷன் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்ததால், சிறு சிறு சாலை விபத்துக்கள் அடிக்கடி நடந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி புகார்கள் வந்தன.

புகாரின் அடிப்படையில், மேட்டுப்பாளையம் உட்கோட்ட பிரிவு மாநில நெடுஞ்சாலை துறையினர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிறுமுகையில் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர். ஜேசிபி இயந்திர உதவியுடன், சாலையின் இருபுறங்களிலும் உள்ள கடைகளின் முன்பகுதிகள், ஷீட்கள் போன்றவைகள் அகற்றப்பட்டன.

இதனிடையே தற்போது மீண்டும் ஆக்கிரமிப்பு கடைகள் மெல்ல மெல்ல சாலையோரம் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து, மாநில நெடுஞ்சாலை துறையினரால், சாலையில் உள்ள ஆக்கிரமிப்புக்கள் அகற்ற, மைக் வாயிலாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.

ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்டவர்கள் அகற்றவில்லை என்றால் நெடுஞ்சாலை துறையினர் அகற்றுவார்கள் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.-------






      Dinamalar
      Follow us