ADDED : நவ 16, 2024 08:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை!: கோவை மாவட்டம், பெ.நா.பாளையம் அருகே உள்ள ஒன்னிபாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி,70. கூலி தொழிலாளியான இவர், ஒன்பது வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், கடந்த 2021, அக்., 4ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் மீது கோவையில் உள்ள முதன்மை சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி குலசேகரன், குற்றம் சாட்டப்பட்ட ரங்கசாமிக்கு, 20 ஆண்டு சிறை, 15,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

