ADDED : செப் 19, 2024 11:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: காந்திபுரம் அருகில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
மேட்டுப்பாளையம் சேரன் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி, 71. இவர் காந்திபுரம் பஸ் நிலையம் முன் ரோட்டை கடக்க முயன்றார்.
அவ்வழியாக, 18 வயது பெண் ஒருவர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் தனது தந்தையுடன் வந்தார். இந்நிலையில், எதிர்பாராதவிதமாக முதியவர் மீது மோதியது. இதில் முதியவர் மற்றும் இரு சக்கர வாகனத்தில் வந்த தந்தை, மகள் மூவரும் விழுந்தனர். முதியவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, முதியவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.