sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மது குடிக்க பணம் கேட்டு முதியவருக்கு செங்கல் அடி

/

மது குடிக்க பணம் கேட்டு முதியவருக்கு செங்கல் அடி

மது குடிக்க பணம் கேட்டு முதியவருக்கு செங்கல் அடி

மது குடிக்க பணம் கேட்டு முதியவருக்கு செங்கல் அடி


ADDED : நவ 01, 2025 05:22 AM

Google News

ADDED : நவ 01, 2025 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்: முதியவரிடம் மது குடிக்க பணம் கேட்டு, மண்டையை உடைத்த, இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

பேரூரை சேர்ந்தவர் மோகன்தாஸ், 66. அதே பகுதியில் ஆயில் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று பகல், மோகன்தாஸ் பேரூர் அங்காளம்மன் கோவில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, எதிரே வந்த வாலிபர்கள் இருவர், வழிமறித்து மது குடிக்க பணம் கேட்டுள்ளனர். மோகன்தாஸ் பணம் கொடுக்க மறுத்துள்ளார். வாலிபர்கள் செங்கல் எடுத்து, மோகன்தாஸின் தலையில் அடித்துள்ளனர். அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டதும், வாலிபர்கள் தப்பினர். காயமடைந்த மோகன்தா ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அவர் அளித்த புகா ரின்பேரில், பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, பேரூரை சேர்ந்த ராகுல், 21, சிவா,21 ஆகிய இருவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us