/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓணம் சீசன் துவங்கியது; வாழைத்தார் விலை உயர்ந்தது
/
ஓணம் சீசன் துவங்கியது; வாழைத்தார் விலை உயர்ந்தது
ADDED : ஆக 28, 2025 05:48 AM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில் வாழைத்தார் விலை அதிகரித்துள்ளது.
கிணத்துக்கடவு, தினசரி காய்கறி மார்க்கெட்டில், நேற்று செவ்வாழை மற்றும் பூவன் கிலோ - - 40 முதல் 50 ரூபாய்; நேந்திரன் -- 60, ரஸ்தாளி --- 45, கதளி --- 40, சாம்பிராணி வகை வாழைத்தார் --- 50 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
கடந்த வாரத்தை விட, தற்போது செவ்வாழை கிலோ - 20 ரூபாய் விலை குறைந்துள்ளது. மேலும், ரஸ்தாளி, சாம்பிராணி வகை, கதளி ஆகிய வாழைத்தார்கள் 5 ரூபாயும், பூவன் - 2 முதல் 12 ரூபாய் மற்றும் நேந்திரன் -- 30 ரூபாய் வரை விலை அதிகரித்தது.
வியாபாரிகள் கூறுகையில், 'கடந்த வாரத்தை காட்டிலும், நேற்று மார்க்கெட்டில் வாழைதார்கள் விலை உயர்ந்தது. விநாயகர் சதுர்த்தி மற்றும் ஓணம் சீசன் காரணமாக விலை அதிகரித்து காணப்பட்டது,' என்றனர்.