/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதை மாத்திரையுடன் ஒருவர் கைது
/
போதை மாத்திரையுடன் ஒருவர் கைது
ADDED : மார் 29, 2025 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனுார்: கோவை சுந்தராபுரம் போலீஸ் எஸ்.ஐ.,முத்துகுமார், நேற்று முன்தினம் பிள்ளையார்புரம் சாலையில் ரோந்து சென்றார். அங்குள்ள கல்லுக்குழி அருகே நின்றிருந்த ஒருவரை விசாரித்தார்.
நாகராஜபுரம், நாகாத்தம்மன் கோவில் அருகே வசிக்கும் ஜாஹீர் ஹுசேன், 32 என தெரிந்தது. அவர் விற்பனைக்காக போதைக்கு பயன்படுத்தும் அய்பிரஜோலம், 10 டேப்பன்டடால், 20 என மொத்தம், 30 மாத்திரைகள் வைத்திருப்பதும் தெரியவந்தது. மாத்திரைகளை பறிமுதல் செய்து, ஜாஹீர் ஹுசேனை கைது செய்தார்.