ADDED : ஜூலை 27, 2025 10:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; ஆனைகட்டியில் அரசு பஸ் மோதி ஒருவர் உயிரிழந்தார்.
ஆனைகட்டி, பனப்பள்ளியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மகேந்திரன்,18; கூலி வேலை செய்தார்.
நேற்று முன்தினம் காலை ஆனைகட்டியில் இருந்து கோவையை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். ஆனைகட்டி அரசு ஐ.டி.ஐ., அருகே, இருசக்கர வாகனம் எதிரே வந்த அரசு பஸ்சுடன் மோதியது. இதில், தலையில் பலத்த காயம் அடைந்த மகேந்திரன், அதே இடத்தில் இறந்தார்.
தடாகம் போலீசார் விசாரிக்கின்றனர்.