ADDED : மார் 14, 2026 05:52 AM
மேட்டுப்பாளையம் எஸ்.எம். நகரில், நகராட்சிக்கு உட்பட்ட கோவிந்தம் பிள்ளை மயானத்தில், சாந்திவனம் உள்ளது. இங்கு சடலங்கள், வணிக சிலிண்டர் வாயிலாக தகனம் செய்யப்படுகிறது. மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கம், சாந்திவனத்தை நிர்வகித்து வருகிறது. இங்கு ஒரு நாளைக்கு ஐந்து உடல்களை தகனம் செய்ய வசதி உள்ளது.
சாந்திவனம் மேலாளர் சுலோச்சனா கூறியதாவது:
சாந்திவனத்தில் உடல்களை தகனம் செய்ய, கமர்சியல் சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. ஒரு உடலை தகனம் செய்ய, ஒரு முழு சிலிண்டர் தேவைப்படுகிறது. வழக்கமாக, 15 சிலிண்டர்கள் எப்போதும் இருப்பு வைத்திருப்போம். கமர்சியல் சிலிண்டர் விநியோகம் இல்லாததால், இருப்பு உள்ள சிலிண்டர்களை வைத்து உடல்களை தகனம் செய்து வருகிறோம்.
தற்போது கைவசம் ஐந்து சிலிண்டர்கள் மட்டுமே உள்ளது. நிர்வாகத்திடம், சிலிண்டர்கள் வழங்கும்படி கேட்டுள்ளோம். நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்வதாக கூறி உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.
