sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

திறந்தவெளியில் கழிவு குவிப்பு; நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

/

திறந்தவெளியில் கழிவு குவிப்பு; நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

திறந்தவெளியில் கழிவு குவிப்பு; நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

திறந்தவெளியில் கழிவு குவிப்பு; நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை


ADDED : செப் 30, 2024 11:05 PM

Google News

ADDED : செப் 30, 2024 11:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை : வால்பாறையில், திறந்தவெளியில் கழிவு கொட்டினால் அபராதம் விதிக்கப்படும், என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், வால்பாறை நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை தரம் பிரித்து, இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.

நகரை சுகாதாரமாக மாற்ற, நகராட்சி சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்க்கொள்ளப்படுகின்றன.

நகராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் கூறியதாவது: துாய்மை இந்தியா திட்டம் துவங்கி, 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், திட்டம் குறித்து வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

வால்பாறை நகரில், பொதுமக்கள் சிலர் குப்பையை திறந்தவெளியில் வீசி செல்கின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் ஆற்றோரப்பகுதியில் வீடு கட்டி வசிக்கும் மக்கள், குப்பையை ஆற்றில் வீசுகின்றனர்.

துாய்மை பணியாளர்கள் வீடு தேடி வந்து குப்பையை தரம் பிரித்து வாங்கி செல்லும் நிலையில், திறந்தவெளியில் குப்பையை வீசுவதை மக்களும் தவிர்க்க வேண்டும். மீறினால் அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு, கூறினார்.






      Dinamalar
      Follow us