/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராம்ராஜ் காட்டன் ஷோரூம் சுந்தராபுரத்தில் திறப்பு
/
ராம்ராஜ் காட்டன் ஷோரூம் சுந்தராபுரத்தில் திறப்பு
ADDED : ஜன 10, 2025 12:28 AM

போத்தனூர்; கோவை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில், சுந்தராபுரத்தில் சிட்டி யூனியன் வங்கி எதிர்புறம், ராம்ராஜ் காட்டன் ஷோரூம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நேற்று நடந்த விழாவில், நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அபிராமி மருத்துவமனை இயக்குனர் குந்தவிதேவி குத்து விளக்கேற்றினார். அபிராமி குழும தலைவர் டாக்டர் பெரியசாமி முதல் விற்பனையை துவக்கி வைத்தார். ஆனைமலைஸ் டொயோட்டா - வின் துணை தலைவர் பிரசாத்கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.
முன்னதாக ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் வரவேற்றார். முன்னாள் குறிச்சி நகராட்சி தலைவர் பிரபாகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் கூறுகையில் மாவட்டத்தின் அனைத்து முக்கிய சாலைகளிலும் எங்களது ஷோரூம் உள்ளது. பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வேஷ்டி, பேன்ஸி பார்டர், ரிங்கிள் பிரீ, சுபமுகூர்த்தம், எம்ப்ராய்டரி, பட்டு என பலவித வேஷ்டி ரகங்கள், காட்டன், எம்ப்ராய்டரி, கூல் காட்டன், அல்டிமேட், பட்டு. பார்டர் மேட்சிங் லினன் என சட்டை ரகங்கள், டி சர்ட்கள் உள்ளன.
பெண்களுக்கான காட்டன், பட்டு சேலைகள், லெக்கின்ஸ், சிம்மிஸ் போன்றவையும் விற்பனைக்குள்ளது,'' என்றார்.

