/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுநீரக குழாய் ஆபரேசனுக்கு காப்பீடு தொகை வழங்க உத்தரவு
/
சிறுநீரக குழாய் ஆபரேசனுக்கு காப்பீடு தொகை வழங்க உத்தரவு
சிறுநீரக குழாய் ஆபரேசனுக்கு காப்பீடு தொகை வழங்க உத்தரவு
சிறுநீரக குழாய் ஆபரேசனுக்கு காப்பீடு தொகை வழங்க உத்தரவு
ADDED : ஜூன் 19, 2025 11:50 PM
கோவை: சிறுநீரக குழாய் ஆபரேசனுக்கு, மருத்துவ காப்பீடு தொகை வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
கோவை, ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த பழனியப்பன் என்பவர், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மருத்துவ காப்பீடு செய்திருந்தார். இந்நிலையில் அவருக்கு சிறுநீரக குழாய் பிரச்னை ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்கான மருத்துவ கட்டணம் 82 ஆயிரம் ரூபாய் செலுத்தினார். இத்தொகையை வழங்க கோரி, இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு விண்ணப்பித்தார்.
ஆனால், முழு பில் தொகையும் அனுமதிக்கவில்லை. குறிப்பிட்ட தொகை மட்டும் கொடுத்து விட்டு, 27 ஆயிரம் ரூபாய் வழங்க மறுத்துவிட்டனர். இது குறித்து கேட்ட போது உரிய பதில் அளிக்கவில்லை.
இதனால் இன்சூரன்ஸ் நிறுவனம் மீதி தொகை மற்றும் இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள்பிறப்பித்த உத்தரவில், 'இன்சூரன்ஸ் நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரர் மருத்துவ செலவு பாக்கி தொகையில், 20 ஆயிரத்து 105 ரூபாய் வழங்க வேண்டும், மனஉளைச்சலுக்கு இழப்பீடாக, 7,000 ரூபாய், வழக்குசெலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.