sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மருத்துவ காப்பீடு செய்தவருக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு தர உத்தரவு

/

மருத்துவ காப்பீடு செய்தவருக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு தர உத்தரவு

மருத்துவ காப்பீடு செய்தவருக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு தர உத்தரவு

மருத்துவ காப்பீடு செய்தவருக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு தர உத்தரவு


ADDED : அக் 23, 2025 11:43 PM

Google News

ADDED : அக் 23, 2025 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: மருத்துவ காப்பீடு செய்தவருக்கு,சிகிச்சை கட்டணம், 15 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டது.

பொள்ளாச்சி, மகாலிங்கபுரத்தை சேர்ந்த மணிகண்டன்,55, என்பவர் 'இப்கோ டோக்கியோ' என்ற இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மருத்துவ காப்பீடு செய்திருந்தார். இந்நிலை யில், கடந்த 2024, ஜன.,25ல், பைக்கில் சென்ற போது விபத்து ஏற்பட்டு படுகாயமடைந்தார். அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதற்கு, 9.19 லட்சம் ரூபாய் செலவானது. சில மாதங்கள் கழித்து மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், மருத்துமவனையில் சேர்க்கப்பட்டார். இதற்கு 2.76 லட்சம் சிகிச்சை கட்டணம் செலுத்தினார்.

மருத்துவ செலவுக்கான கட்டணத்தை வழங்க கோரி இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு விண்ணப்பித்தார்.ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனம் விண்ணப்பத்தை நிராகரித்தது. இதனால் கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'இன்சூரன்ஸ் நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால்,பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு சிகிச்சை கட்டணம், 15 லட்சம் ரூபாய் வழங்குவதோடு, மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 10,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us