sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நவீன கழிவுநீர் உந்து நிலையத்தின் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

/

நவீன கழிவுநீர் உந்து நிலையத்தின் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

நவீன கழிவுநீர் உந்து நிலையத்தின் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

நவீன கழிவுநீர் உந்து நிலையத்தின் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு


ADDED : மே 22, 2025 01:25 AM

Google News

ADDED : மே 22, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கவுண்டம்பாளையம், துடியலுார் பகுதிகளில் ரூ.554.67 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்துவருகின்றன. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், கவுண்டம்பாளையத்தில் அமைக்கப்படுகிறது.

துடியலுார் பகுதிகளில் இருந்து, பாதாள சாக்கடை குழாய் வாயிலாக, சுப்பிரமணியம்பாளையத்தில் அமைந்துள்ள கழிவுநீர் உந்து நிலையம் சென்று, அங்கிருந்து கவுண்டம்பாளையத்திற்கு கழிவுநீர் எடுத்து செல்லப்பட உள்ளது.

இதற்கென, தொட்டிகள் அமைப்பதற்கு அருகே குடியிருப்புகள் உள்ளதால், மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், நவீன முறையில், 10 மீ., விட்டமும், 8 மீ., ஆழமும் கொண்ட தொட்டி கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி, வெள்ளக்கிணறு பிரிவு ஆகிய பகுதிகளுக்குட்பட்ட பாதாள சாக்கடைக்கான, முதன்மை கழிவுநீர் உந்துநிலையம் கட்டுமான பணிகளையும் பார்வையிட்ட அவர், பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us