sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

உள்ளாட்சிகளில் காலியிடங்கள் வரும் 30ல் நேரில் சமர்ப்பிக்க உத்தரவு

/

உள்ளாட்சிகளில் காலியிடங்கள் வரும் 30ல் நேரில் சமர்ப்பிக்க உத்தரவு

உள்ளாட்சிகளில் காலியிடங்கள் வரும் 30ல் நேரில் சமர்ப்பிக்க உத்தரவு

உள்ளாட்சிகளில் காலியிடங்கள் வரும் 30ல் நேரில் சமர்ப்பிக்க உத்தரவு


ADDED : ஜன 27, 2025 12:43 AM

Google News

ADDED : ஜன 27, 2025 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவியிடங்கள் குறித்த பட்டியலை, 30ம் தேதி சமர்ப்பிக்க, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பதவி, 2027 வரை இருக்கிறது. உள்ளாட்சிகளில் உள்ள காலி பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடந்த, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதனால், காலியாக உள்ள பதவியிடங்களை பட்டியலிட்டு, 30ம் தேதி நேரில் வந்து அறிக்கை சமர்ப்பிக்க கோவை மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டத்தில், மாநகராட்சியில், 56வது வார்டு கவுன்சிலர் பதவி, தாளியூர் பேரூராட்சி - 3வது வார்டு, பொள்ளாச்சி நகராட்சி - 7 வது வார்டு, 21வது வார்டு, 12வது வார்டு, மேட்டுப்பாளையம் நகராட்சி - 2வது வார்டு, தென்கரை பேரூராட்சி - 1வது வார்டு, செட்டிபாளையம் பேரூராட்சி - 4வது வார்டு, 10வது வார்டு, வீரபாண்டி பேரூராட்சி - 13வது வார்டு, நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி - 2வது வார்டு, வேடபட்டி பேரூராட்சி - 11வது வார்டு, கோட்டூர் பேரூராட்சி - 15வது வார்டு ஆகிய, 13 பதவியிடங்கள் காலியாக இருக்கின்றன.

இவற்றின் முழுமையான விபரம், ஆண்கள், பெண்கள், பொது மற்றும் இட ஒதுக்கீடு, பதவியிடம் காலியானதற்கான காரணங்கள் குறித்த தகவல்களுடன், சென்னையில் உள்ள அலுவலகத்துக்கு நேரில் வந்து சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இறப்பு, தகுதியிழப்பு, ராஜினாமா உள்ளிட்ட ஏதேனும் ஒரு காரணத்தால் பதவி காலியிடம் உருவாகியிருக்கும்; அதைப்பற்றிய தகவல் தெரிவிக்க வேண்டும். கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்தால், அதைப்பற்றிய விபரத்தை, வழக்கு தொடர்பான தகவல்களையும் தாக்கல் செய்ய வேண்டும்.






      Dinamalar
      Follow us