/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரும் 31ல் மாமன்ற சாதாரண கூட்டம்
/
வரும் 31ல் மாமன்ற சாதாரண கூட்டம்
ADDED : ஜூலை 28, 2025 09:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி தலைமையிலும், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையிலும் வரும், 31ம் தேதி மாமன்ற சாதாரண கூட்டம் நடக்கிறது.
காலை, 10:30 மணிக்கு நடக்கும் இக்கூட்டத்தில் முதல்வர் படிப்பகம் அமைத்தல், மாநகராட்சி பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், வார்டுகளில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்டவை தொடர்பான, 25 தீர்மானங்கள், மன்ற அனுமதிக்காக முன்வைக்கப்படுகின்றன.