/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இயற்கை விவசாயம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
இயற்கை விவசாயம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : அக் 06, 2025 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில்பாளையம்:வெள்ளைமடை ஊராட்சிக்குட்பட்ட தொட்டிபாளையம் துவக்கப் பள்ளியில், அக்ரஹார சாமக்குளம் ஏரி பாதுகாப்பு அமைப்பு, கவுசிகா நீர்க் கரங்கள் மற்றும் அமேசான் நிறுவனத்தின் 30 ஊழியர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
பள்ளி வளாகத்தில் உள்ள நிலத்தை சுத்தப்படுத்தி, தயார் செய்து, கத்தரி, வெண்டை, தக்காளி, நாற்றுகள் நடவு செய்யப்பட்டன. கீரை விதைகள் விதைக்கப்பட்டு, மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி பங்கேற்றோருக்கு நன்றி தெரிவித்தார்.