sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'கட்டுப்பாடு இழந்த' போலீஸ்காரர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் 

/

'கட்டுப்பாடு இழந்த' போலீஸ்காரர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் 

'கட்டுப்பாடு இழந்த' போலீஸ்காரர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் 

'கட்டுப்பாடு இழந்த' போலீஸ்காரர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் 

1


ADDED : அக் 20, 2024 02:24 AM

Google News

ADDED : அக் 20, 2024 02:24 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கோவை, சாய்பாபா காலனி போலீஸ் ஸ்டேஷனில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் பாலமுருகன், 40. இவர், நேற்று முன்தினம் இரவு, சாய்பாபா காலனியில் உள்ள ஒரு பேக்கரிக்கு டீ குடிக்க சென்றார்.

அங்கு தனியார் மருத்துவமனை செவிலியர்கள் சிலர், டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, போக்குவரத்து காவலர் தன் அலைபேசியில், அவர்களை படம் பிடித்துள்ளார். இதைப்பார்த்த பெண்களில் ஒருவர், அவரிடம் கேட்டுள்ளார்.

அப்பெண்ணை, காவலர் தள்ளிவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளார். பெண்கள் சத்தம் போட, அருகில் இருந்தவர்கள் அவரை துரத்தி பிடித்தனர். அவரிடம் அலைபேசியை காண்பிக்க கேட்ட போது மறுத்துள்ளார். உடன் சாய்பாபா காலனி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சாய்பாபா காலனி போலீசார் அவரிடம் விசாரித்தனர். அவரின் அலைபேசியை சோதனை செய்தபோது, அவர் பெண்களை படம் எடுத்திருப்பது தெரியவந்தது.

இது குறித்து, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணை நடத்திய கமிஷனர், போக்குவரத்து தலைமை காவலரை, கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us