/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேல்நிலைத் தொட்டி கட்டும் பணி துவக்கம்
/
மேல்நிலைத் தொட்டி கட்டும் பணி துவக்கம்
ADDED : மார் 10, 2026 05:44 AM

அன்னுார்: அன்பு நகரில், ரூ.19 லட்சம் மதிப்பில் மேல்நிலைத் தொட்டி கட்டும் பணி துவங்கியது.
அன்னுார் பேரூராட்சியில், கோவை சாலையில் அன்பு நகரில் வீடுகள் அதிகரித்து உள்ளன. இதனால் போதிய குடிநீர் வினியோகம் செய்ய முடியாமல், குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. இதையடுத்து, 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்ட, அவிநாசி தொகுதி எம்.எல்.ஏ., தனபால், தொகுதி மேம்பாட்டு நிதியில், ரூ. 19 லட்சம் நிதி ஒதுக்கினார்.
இந்நிதியில், மேல்நிலைத் தொட்டி கட்டும் பணி, நேற்று பூமி பூஜையுடன் துவங்கியது.
பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், கவுன்சிலர் அங்காத்தாள் திருமூர்த்தி, ஜெ., பேரவை மாவட்ட இணைச் செயலாளர் சுந்தரம், நிர்வாகிகள் சண்முகம், ஆண்டவர் உட்பட பலர் பங்கேற்றனர்.

