/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதிக எடையுடன் வந்த லாரிகள் பறிமுதல்
/
அதிக எடையுடன் வந்த லாரிகள் பறிமுதல்
ADDED : நவ 28, 2024 05:45 AM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, அதிக எடையுடன் கூடிய மூன்று டிப்பர் லாரிகளை பிடித்து போலீசார், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
பொள்ளாச்சி அருகே கோமங்கலம்புதுார் போலீசார், அந்தியூர் வாகன சோதனைச்சாவடியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த மூன்று டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனர். அதிக எடையுடன் வந்ததை கண்டறிந்த போலீசார், டிரைவர்கள் திருச்சூர் கண்ணன், 40, கொமரலிங்கம் இருசா, 49, சிவசாமி, 50 ஆகியோரிடம் விசாரித்தனர்.
விசாரணையில், உடுமலை கிருஷ்ணாபுரம் கல்குவாரியில் இருந்து கஞ்சம்பட்டிக்கும், நரசிங்காபுரம் கல்குவாரியில் இருந்து வீரல்பட்டியில் உள்ள தனியார் மெட்டல் கிரஷருக்கும் கொண்டு சென்றது தெரிய வந்தது. மூன்று லாரிகளில் முறையே, 18 டன், ஏழு டன், 10 டன் எடை அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது. மூன்று லாரிகளை பறிமுதல் செய்த போலீசார், வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக தெரிவித்தனர்.