sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிறுமுகை முருகர் கோவில்களில் பங்குனி மாத கிருத்திகை விழா

/

சிறுமுகை முருகர் கோவில்களில் பங்குனி மாத கிருத்திகை விழா

சிறுமுகை முருகர் கோவில்களில் பங்குனி மாத கிருத்திகை விழா

சிறுமுகை முருகர் கோவில்களில் பங்குனி மாத கிருத்திகை விழா


ADDED : ஏப் 02, 2025 10:29 PM

Google News

ADDED : ஏப் 02, 2025 10:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; சிறுமுகை பழத்தோட்டத்தில், மிகவும் பழமையான பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இங்கு கிருத்திகை விழா விமரிசையாக நடைபெறும்.

நேற்று பங்குனி மாத கிருத்திகை முன்னிட்டு, காலை, 6:00 மணிக்கு கோவில் நடை திறந்து, திருப்பள்ளி எழுச்சி நடந்தது. பின்பு மூலவருக்கு பால் அபிஷேகம், கால சந்தி பூஜை ஆகியவை நடைபெற்றன.

10:00 மணிக்கு கல்லாறு அகத்தியர் ஞானபீட சரோஜினி மாதாஜி, ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். பாலசுப்பிரமணியர் சுவாமிக்கு, 16 வகையான வாசனை திரவியங்களால், மகா அபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து அலங்காரம் பூஜையும், தீபாராதனையும் நடந்தது. பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிறுமுகை அடுத்த எலகம்பாளையத்தில் மிகவும் பழமையான பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இங்கு பங்குனி மாத கிருத்திகை முன்னிட்டு, காலை, 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. காலை, 10:00 மணிக்கு அபிஷேக பூஜை நடந்தது. பாலதண்டாயுதபாணி பஜனை குழுவினர் பஜனை பாடினர். மதியம், 12:00 மணிக்கு அலங்கார பூஜையும், அதைத் தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது. பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us