/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பங்குனி உத்திர தேர்த்திருவிழா: கொடியேற்றம்
/
பங்குனி உத்திர தேர்த்திருவிழா: கொடியேற்றம்
ADDED : மார் 22, 2026 04:05 PM
தொண்டாமுத்தூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், மார்ச் 23ல் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொடியேற்றம் நடக்கிறது.
கோவையின் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகவும், ஆயிரம் ஆண்டு பழமை வாழ்ந்த கோவிலாகவும், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்தாண்டு, பங்குனி உத்திர தேர்த்திருவிழா, இன்று காலை, 9:00 முதல் 10:00 மணிக்குள், கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
தினசரி காலையும் மாலையும் யாகசாலை பூஜை, திருவீதி உலா நடக்கிறது. தொடர்ந்து, 28ம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவமும், 29ம் தேதி, பங்குனி உத்திர தேரோட்டமும் நடக்கிறது.
இதற்கான முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் போலீசார் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

