sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா

/

முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா

முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா

முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா


ADDED : ஏப் 11, 2025 10:48 PM

Google News

ADDED : ஏப் 11, 2025 10:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; அன்னுார் வட்டாரத்தில் முருகன் கோவில்களில், பங்குனி உத்திர திருவிழா நேற்று நடந்தது.

சாலையூர் பழனி ஆண்டவர் கோவிலில் நேற்று பங்குனி உத்திர திருவிழாவில், காலை 10:30 மணிக்கு, பழனி ஆண்டவருக்கு, பால், தயிர், நெய், பன்னீர் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேக பூஜை நடந்தது. இதையடுத்து கலச அபிஷேகம் நடந்தது.

மதியம் அலங்கார பூஜையும், புஷ்ப அர்ச்சனையும் நடந்தது. சிரவை ஆதீனம் குமரகுருபர சாமிகள், அவிநாசி சித்தர் பீட சின்னசாமி சுவாமிகள் பூஜையை நடத்தி வைத்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் உள்ள முருகப்பெருமான் சன்னதியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது.

குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில், எல்லப்பாளையம் பழனி ஆண்டவர் கோவில், குன்னத்தூர் பழனியாண்டவர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நேற்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.






      Dinamalar
      Follow us