/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மீண்டும் போராட்டம் நடத்தப்படும்; பகுதி நேர ஆசிரியர்கள்
/
மீண்டும் போராட்டம் நடத்தப்படும்; பகுதி நேர ஆசிரியர்கள்
மீண்டும் போராட்டம் நடத்தப்படும்; பகுதி நேர ஆசிரியர்கள்
மீண்டும் போராட்டம் நடத்தப்படும்; பகுதி நேர ஆசிரியர்கள்
ADDED : ஆக 14, 2025 10:00 PM
கோவை; பணி நிரந்தர அறிவிப்பை அரசு விரைவில் வெளியிட வேண்டும்; இல்லையெனில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என பகுதி நேர ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி, கணினி, ஓவியம், தையல், இசை உள்ளிட்ட சிறப்பு பாடங்களை கற்றுத்தர, 2012ல் 16 ஆயிரம் பேர் பகுதி நேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்பட்டது. பின்னர் சம்பள உயர்வாக 2014ல் ரூ.2 ஆயிரம், 2017ல் ரூ.700, 2021ல் ரூ.2,300 வழங்கப்பட்டு, தற்போதைய தொகுப்பூதியம் ரூ.12,500 ஆயிரமாக உயர்ந்தது.
பணி ஓய்வு, ராஜினாமா உள்ளிட்ட காரணங்களால் சுமார் 5 ஆயிரம் காலியிடங்கள் ஏற்பட்டதால், தற்போது 12 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். கோவையில், 410 பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், '2021 சட்டமன்றத் தேர்தலில், திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்' என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறப்பு ஆசிரியர் சங்கத்தின் மாநில பொருளாளர் ஆனந்தகுமார் கூறுகையில், “இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படாத நிலையில், மே மாதம் சம்பளம், போனஸ், பண்டிகை முன்பணம், மருத்துவ காப்பீடு, மரணம் அடைந்த குடும்பத்திற்கு நிவாரணம், வருங்கால வைப்பு தொகை உள்ளிட்ட எதுவுமே வழங்கப்படவில்லை.
பணி நிரந்தரம் கோரி நீண்ட நாட்களாக போராடி வருகிறோம். எனவே, வருகிற சுதந்திர தின அறிவிப்பில் முதல்வர் அறிவிக்க வேண்டும்; இல்லையெனில் மீண்டும் போராட்டம் நடத்துவோம்” என்றனர்.