/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்கள் கலை விழாவில் பங்கேற்றோர் மலைப்பு
/
மக்கள் கலை விழாவில் பங்கேற்றோர் மலைப்பு
ADDED : ஜன 19, 2026 06:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில், கலைச்சங்கமம் நிகழ்ச்சி, காந்திபார்க்கில் நேற்று நடந்தது.
இதில் நமது பாரம்பரிய நாட்டுப்புற கலைகளான காவடியாட்டம், கரகாட்டம், மாடாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், சி லம்பாட்டம், ஜமாப் இசை மற்றும் விழிப்புணர்வு நாடகம், உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடந்தன. 50க்கு மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் இசை கலைஞர்கள் மக்களை மகிழ்வித்தனர். பங்கேற்ற கலைஞர்களுக்கு துணைமேயர் வெற்றிச்செல்வன் பரிசு வழங்கி பாராட்டினார்.

