sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வனவிலங்குகளுக்கு உணவு கண்காணிக்க ரோந்து

/

வனவிலங்குகளுக்கு உணவு கண்காணிக்க ரோந்து

வனவிலங்குகளுக்கு உணவு கண்காணிக்க ரோந்து

வனவிலங்குகளுக்கு உணவு கண்காணிக்க ரோந்து


ADDED : அக் 18, 2024 10:44 PM

Google News

ADDED : அக் 18, 2024 10:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் வனவிலங்குகளுக்கு உணவளிப்போரை கண்காணிக்க வனத்துறை சார்பில், ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலை மற்றும் மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலை வழியாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு தினமும் பல நூறு பயணிகள் சுற்றுலா செல்கின்றனர். அவ்வாறு செல்லும் சுற்றுலா பயணிகள், சாலையோரங்களில் உள்ள இடங்களில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கவும், உணவு சாப்பிடவும் வாகனங்களை நிறுத்துகின்றனர்.

இவர்களில் சிலர் தங்களது வாகனத்திற்கு அருகில் வரும் வனவிலங்குகளுக்கு உணவளிக்கின்றனர்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனத்துறையினர் கூறுகையில், வனவிலங்குகளுக்கு உணவளிப்போரை கண்காணிக்க வனத்துறை சார்பில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ரோந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வனவிலங்குகளுக்கு உணவு அளிப்பதால் அவை சாலை விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. வாகன ஓட்டிகள் வனப்பகுதி சாலைகளில் மெதுவாக செல்ல வேண்டும் , என்றனர்.






      Dinamalar
      Follow us