/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
/
பட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED : ஜன 25, 2024 06:34 AM
தொண்டாமுத்தூர் : பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் உபகோவில்களில் ஒன்றான, பேரூர் பட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 22ம் தேதி, விநாயகர் பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை, 9:45 மணிக்கு, யாக சாலை மண்டபத்தில் இருந்து கடங்கள் புறப்பாடு நடந்தது.
காலை, 10:15 மணிக்கு, செந்தில் ராஜ குருக்கள் தலைமையில், மங்கள வாத்தியங்கள் முழங்க, பட்டி விநாயகர் கோவில் விமானத்திற்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
பட்டி விநாயகருக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் மஹா தீபாராதனை நடந்தது. பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.