/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தலைமையாசிரியருக்கு பாவலர் விருது
/
தலைமையாசிரியருக்கு பாவலர் விருது
ADDED : மே 01, 2025 04:48 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி வடக்கு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் பாவலர் விருது வழங்கும் நிகழ்ச்சி, வங்கி ஊழியர் சங்க கட்டடத்தில் நடந்தது. வடக்கு ஒன்றிய தலைவர் வீரக்குமாரசாமி தலைமை வகித்தார். ஒன்றிய துணைச் செயலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.
ஒன்றிய பொருளாளர் பழனிச்சாமி, இளைஞரணி செயலாளர் முருகேஷ்குமார் ஆகியோர் வரவேற்றனர். சிறப்பு விருந்தினராக, மாநில துணைத் தலைவர் சிவக்குமார் கலந்து கொண்டார். தொடர்ந்து, தலைமையாசிரியர் தினகரனுக்கு, 2025ம் ஆண்டுக்கான பாவலர் விருதுக்கான கேடயம் மற்றும் சிறப்பு பரிசு வழங்கினார்.
தொடக்க கல்வி அலுவலர் தங்கராசு, வடக்கு வட்டார கல்வி அலுவலர் வெள்ளியங்கிரி, ஆசிரியர் மன்ற மாநில செயற்குழு உறுப்பினர் நடராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜாஸ்மின் ஜெபராணி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ரஷியாபீபி நன்றி கூறினார்.

