sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நடைபாதை சீரமைப்பு; பொதுமக்கள் மகிழ்ச்சி 

/

நடைபாதை சீரமைப்பு; பொதுமக்கள் மகிழ்ச்சி 

நடைபாதை சீரமைப்பு; பொதுமக்கள் மகிழ்ச்சி 

நடைபாதை சீரமைப்பு; பொதுமக்கள் மகிழ்ச்சி 


ADDED : ஜன 08, 2024 12:05 AM

Google News

ADDED : ஜன 08, 2024 12:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை;வால்பாறையில், 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, நடைபாதை சீரமைக்கப்பட்டது.

வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட, 10வது வார்டில், கக்கன் காலனி, அண்ணா நகர், கலைஞர் நகர், சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்த வார்டில், பல இடங்களில் மக்கள் நடந்து செல்லும் நடைபாதை இடிந்த நிலையில் காணப்படுகிறது.

பல்வேறு இடங்களில் தடுப்புச்சுவரும் கட்டப்படவில்லை. இதனால், மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். குறிப்பாக, வால்பாறை நகர் பள்ளி வாசல் செல்லும் நடைபாதை இடிந்த நிலையில் உள்ளதாக 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

இதனையடுத்து, நகராட்சி சார்பில் கரடு, முரடாக இருந்த நடைபதை சீரமைக்கப்பட்டது. 'தினமலர்' செய்தியால் நடைபாதை சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us