sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நகராட்சிக்கு கவனமா போங்க; தேனீ பதம் பார்த்து விடும்

/

நகராட்சிக்கு கவனமா போங்க; தேனீ பதம் பார்த்து விடும்

நகராட்சிக்கு கவனமா போங்க; தேனீ பதம் பார்த்து விடும்

நகராட்சிக்கு கவனமா போங்க; தேனீ பதம் பார்த்து விடும்


ADDED : பிப் 16, 2024 11:27 PM

Google News

ADDED : பிப் 16, 2024 11:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில், வரி, குடிநீர் கட்டணம், பிறப்பு, இறப்பு சான்று, பெயர் மாற்றம், கோரிக்கை மனு கொடுக்க பொதுமக்கள் அதிகளவு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், நகராட்சி அலுவலக கட்டடத்தில் இரண்டு பெரிய தேன் கூடுகள் கட்டப்பட்டுள்ளன. அதில், தேனீக்கள் அதிகளவு ரிங்காரமிட்டு சுற்றுகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.

பொதுமக்கள் கூறியதாவது:

நகராட்சியில் பெரியளவிலான இரண்டு தேன் கூடுகள் உள்ளன. அதில் இருந்து தேனீக்கள், காலை மற்றும் மாலை நேரங்களில் பறக்கின்றன.

இரவு நேரத்தில், லைட் வெளிச்சத்துக்கு பரவும் தேனீக்களால், வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர். மேலும், நகராட்சி அருகே உள்ள கடைகளிலும், உழவர் சந்தை பகுதியிலும் தேனீக்கள் அதிகளவில் பறக்கின்றன. தேனீக்களை கண்டதும், சிலர் அச்சத்துடன் வியாபாரத்தை முடித்துக்கொள்ளும் நிலையும் உள்ளது.

கடந்த மாதம், 15ம் தேதி பொள்ளாச்சி அருகே, ஆர்.பொன்னாபுரத்தில் தை மாதம் மறைந்த முன்னோர்களுக்கு, பொதுமக்கள் ஒன்று கூடி பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். அப்போது பறந்த தேனீக்கள் கொட்டியதில், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவம் நடந்தது.

அதுபோன்று, அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, தேன் கூட்டை கலைக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us