sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஓய்வூதியர் சங்கத்தின் வட்டக்கிளை மாநாடு

/

ஓய்வூதியர் சங்கத்தின் வட்டக்கிளை மாநாடு

ஓய்வூதியர் சங்கத்தின் வட்டக்கிளை மாநாடு

ஓய்வூதியர் சங்கத்தின் வட்டக்கிளை மாநாடு


ADDED : ஆக 14, 2025 08:23 PM

Google News

ADDED : ஆக 14, 2025 08:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனைமலை; '70 வயது பூர்த்தியடைந்த ஓய்வூதியதாரர்களுக்கு, 10 சதவீதம் ஓய்வூதியம் கூடுதலாக வழங்க வேண்டும்,' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம், வட்டக்கிளை மாநாடு, ஆனைமலை பரிமளம் திருமண மண்டபத்தில் நடந்தது. வட்டக்கிளை தலைவர் காளிமுத்து தலைமை வகித்தார். முன்னதாக, துணைத் தலைவர் அருணாச்சலம் அனைவரையும் வரவேற்றார்.

மாவட்ட தலைவர் மதன், மாநாட்டை துவக்கி வைத்தார். வட்டக்கிளை செயலாளர் பழனிசாமி அறிக்கை வாசித்தார். வட்டக் கிளை பொருளாளர் விஜயகுமார், வரவுசெலவு அறிக்கை வாசித்தார்.

மாநாட்டில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக, 7,850 ரூபாய் வழங்க வேண்டும்.

70 வயது பூர்த்தியடைந்த ஓய்வூதியதாரர்களுக்கு, 10 சதவீதம் ஓய்வூதியம் கூடுதலாக வழங்க வேண்டும். அனைத்து மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஓய்வூதியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தருக்கு இலவச மருத்துவ காப்பீடு திட்டம் வழங்க வேண்டும்.

இவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், மாநில துணைத் தலைவர் அரங்கநாதன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us