ADDED : ஜன 29, 2026 07:39 AM
சூலூர், கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சூலூரில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சூலூர் வட்ட கிளை சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, சூலூர் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலைவர் உலகையா தலைமை வகித்தார். துணைத்தலைவர் முத்தையா, செயலாளர் இம்மானுவேல், பொருளாளர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
70 வயதை கடந்த ஓய்வூதியர்களுக்கு, 10 சதவீத கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். கிராமப்புறங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி எழுத்தர் ஆகியோருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக, 7 ஆயிரத்து, 850 ரூபாய் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைந்து, பணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

