sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிறப்பு கிராம சபை கூட்டம்: பங்கேற்க மக்களுக்கு அழைப்பு

/

சிறப்பு கிராம சபை கூட்டம்: பங்கேற்க மக்களுக்கு அழைப்பு

சிறப்பு கிராம சபை கூட்டம்: பங்கேற்க மக்களுக்கு அழைப்பு

சிறப்பு கிராம சபை கூட்டம்: பங்கேற்க மக்களுக்கு அழைப்பு


ADDED : மார் 14, 2024 11:16 PM

Google News

ADDED : மார் 14, 2024 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்;அன்னுார் வட்டாரத்தில், நான்கு ஊராட்சிகளில், சமூகத் தணிக்கை நேற்று நிறைவடைந்தது. இன்று (15ம் தேதி) சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது.

அன்னுார் வட்டாரத்தில், 21 ஊராட்சிகளிலும், நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணிகள் சரியாக நடைபெற்றுள்ளனவா என ஒவ்வொரு ஆண்டும், வெளி தணிக்கையாளர்கள் வாயிலாக அளவீடு செய்யும் பணி நடக்கிறது. பசூர், பொகலூர், வடக்கலூர், பிள்ளையப்பம்பாளையம், ஆகிய நான்கு ஊராட்சிகளில், 2022 ஏப்ரல் 1ம் தேதி முதல், 2023 மார்ச் 31ம் தேதி வரை செய்யப்பட்ட பணிகள் குறித்து வட்டார வள அலுவலர் கனகராஜ் தலைமையில் தணிக்கையாளர்கள் கடந்த 11ம் தேதி சமூக தணிக்கை செய்யும் பணியை துவக்கினர்.

இத்திட்டத்தில் செய்யப்பட்ட வேலைகளை அளவீடு செய்தனர். சொத்துக்களை ஆய்வு செய்தனர். தொழிலாளிகளுக்கு சம்பளம் ஆவணங்களில் உள்ளபடி வழங்கப்பட்டுள்ளதா என வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தை பரிசோதித்தனர்.

இதில் கண்டறியப்பட்ட குறைகள் குறித்த சமூக தணிக்கை அறிக்கை இன்று (15ம் தேதி) நான்கு ஊராட்சிகளிலும், காலை 11:00 மணிக்கு நடைபெறும் சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் வாசிக்கப்படும்.சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்க ஊராட்சி தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us