sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பழங்களை பழுக்க வைக்க ரசாயன ஸ்பிரே; மக்கள் புகார்

/

பழங்களை பழுக்க வைக்க ரசாயன ஸ்பிரே; மக்கள் புகார்

பழங்களை பழுக்க வைக்க ரசாயன ஸ்பிரே; மக்கள் புகார்

பழங்களை பழுக்க வைக்க ரசாயன ஸ்பிரே; மக்கள் புகார்


ADDED : மார் 25, 2025 12:29 AM

Google News

ADDED : மார் 25, 2025 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்:

பழங்களை பழுக்க வைக்க, ரசாயன ஸ்பிரே அடித்தும், தர்பூசணி பழத்தில் நிறத்துக்காக, ரசாயன ஊசி போடுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

எனவே உணவு பாதுகாப்பு அதிகாரி மற்றும் நகராட்சி நிர்வாகம் இவற்றை கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோடை காலம் துவங்கியதை அடுத்து, வீதியெங்கும் தர்பூசணி பழங்கள் விற்பனை அமோகமாக நடைபெறுகின்றன. அதேபோன்று பழக்கடைகளில் வாழைப்பழங்கள், ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

இதில் தர்பூசணி பழத்தில், சிவப்பு நிறத்திற்காகவும், சுவை இனிப்பாக இருக்க, ரசாயன ஊசி போடுவதாக புகார் கூறப்படுகிறது.

அதேபோன்று வாழை காய்களை, பழுக்க வைக்க ரசாயன ஸ்பிரே அடிப்பதாகவும், பழக் குடோன்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன என்ற புகாரும், பொதுமக்களிடையே கூறப்படுகிறது.

கோடை சீசனை அடுத்து பொதுமக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும், தர்பூசணி பழத்தில், ரசாயன ஊசி செலுத்தப்படுகிறதா என்பதையும், வாழைப் பழக்கடைகளிலும், உணவு பாதுகாப்பு அதிகாரிகளும், நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்ய வேண்டும்.

ஏதேனும் தவறுகள் நடக்கும் பட்சத்தில், பழங்களை முற்றிலுமாக அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us