sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பஸ் 'டைமிங்' மாற்ற மக்கள் வலியுறுத்தல்

/

பஸ் 'டைமிங்' மாற்ற மக்கள் வலியுறுத்தல்

பஸ் 'டைமிங்' மாற்ற மக்கள் வலியுறுத்தல்

பஸ் 'டைமிங்' மாற்ற மக்கள் வலியுறுத்தல்


ADDED : அக் 31, 2024 10:08 PM

Google News

ADDED : அக் 31, 2024 10:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை ;உடுமலையில் இருந்து, பெதப்பம்பட்டி, கொங்கல்நகரம் வழியாக அடிவள்ளி கிராமத்துக்கு (வழித்தட எண் 31) பஸ் நீண்ட காலமாக இயக்கப்பட்டு வந்தது. கொரோனா பெருந்தொற்று காலத்துக்கு பின், இந்த பஸ் வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படவில்லை. இது குறித்து கிராம மக்கள் சார்பில், தமிழக முதல்வருக்கு மனு அனுப்பினர்.

இதையடுத்து, காலை 5:35 மணிக்கு உடுமலையில் இருந்து கிளம்பும் ஒரு 'டிரிப்' மட்டும் பஸ் இயக்கப்படுகிறது. இந்த டிரிப்பிலும், பயணியர் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக, போக்குவரத்து கழகத்தினரால் தெரிவிக்கப்படுகிறது.

மக்கள் கூறுகையில், 'உடுமலையில் இருந்து, காலை, 7:15 மணிக்கு கிளம்பி, பெதப்பம்பட்டி, கொங்கல்நகரம் வழியாக அடிவள்ளிக்கு வரும் வகையில், பஸ்சின் பயண நேரத்தை மாற்ற வேண்டும். இதனால், காலை நேரத்தில், கிராமங்களில் இருந்து உடுமலை அரசு கலைக்கல்லுாரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவ, மாணவியருக்கு பயனுள்ளதாக இருக்கும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us