/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விடுமுறை முடிந்து ஊர் திரும்பிய மக்கள்
/
விடுமுறை முடிந்து ஊர் திரும்பிய மக்கள்
ADDED : ஜன 20, 2025 06:18 AM

பொள்ளாச்சி : பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊர் வந்த மக்கள், மீண்டும் அவரவர் பணிபுரியும் ஊர்களுக்கு திரும்பினர். இதனால், பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
பொங்கல் பண்டிகை கடந்த செவ்வாய்க்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, 6 நாட்கள் விடுமுறை கிடைத்தது. தொடர் விடுமுறையால், பல மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில், பணிபுரியும் மக்கள், சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு வந்திருந்தனர்.
நேற்றுடன் விடுமுறை முடிந்த நிலையில், அவரவர், மீண்டும் அவர்கள் பணிபுரியும் இடத்திற்கு புறப்பட்டுச்சென்றனர். இதனால், பஸ் ஸ்டாண்டில் வழக்கத்துக்கும் மாறாக பயணியரின் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
குறிப்பாக, பல்லடம் மார்க்கமாக கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு செல்லும் பஸ்களில் கூட்டம் அதிகரித்தது. பயணியர் பலரும் இருக்கைகளை பிடிக்க, முண்டியடித்துக் கொண்டு பஸ்களில் ஏறினர்.
அதேபோல, பொள்ளாச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு, சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் ஊர் திரும்ப வசதியாக, பழநி மார்க்கமாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டிருந்தன.
அந்த பஸ்கள், பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்ட் வந்தடைந்தபோது, பயணியர் கூட்டம் நிறைந்தே காணப்பட்டதால், பலரும் நின்று கொண்டே பயணிக்க முற்பட்டனர்.
இதேபோல, பெங்களூரு, திருச்சி, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு செல்லும் மக்கள் ஏற்கனவே முன்பதிவு செய்து பஸ்சுக்காக காத்திருந்து பயணித்தனர்.