sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

திறந்தவெளி 'பார்' ஆக மாறிய நிழற்கூரைகளால் மக்கள் அவதி

/

திறந்தவெளி 'பார்' ஆக மாறிய நிழற்கூரைகளால் மக்கள் அவதி

திறந்தவெளி 'பார்' ஆக மாறிய நிழற்கூரைகளால் மக்கள் அவதி

திறந்தவெளி 'பார்' ஆக மாறிய நிழற்கூரைகளால் மக்கள் அவதி


ADDED : ஜூலை 07, 2025 11:04 PM

Google News

ADDED : ஜூலை 07, 2025 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; வால்பாறை நகராட்சியில் மொத்தம், 21 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு மக்களின் நலன் கருதி நகராட்சி சார்பில் நுாற்றுக்கும் மேற்பட்ட பயணியர் நிழற்கூரை கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுத்தோட்டம், மாணிக்கா, நல்லகாத்து, வாட்டர்பால்ஸ், காடம்பாறை உள்ளிட்ட பகுதிகளில், பயணியர் நிழற்கூரைகள் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.

இந்நிலையில், பிற எஸ்டேட் பகுதியில் நகராட்சி சார்பில் ஏற்கனவே கட்டப்பட்ட பயணியர் நிழற்கூரையை மேக்கப் செய்து, புதிய நிழற்கூரைகளாக மாற்றப்பட்டுள்ளன.

எஸ்டேட் பகுதியில் உள்ள நிழற்கூரையில் மாலை நேரங்களில் 'குடி'மகன்களின் திறந்தவெளி பாராக மாறி வருகின்றன. இதனால், மறுநாள் காலையில் நிழற்கூரையை பயன்படுத்த முடியாமல் மக்கள் திறந்தவெளியில் காத்திருக்க வேண்டிய அவல நிலை நீடிக்கிறது.

பொதுமக்கள் கூறியதாவது: மக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட நிழற்கூரையில், பகல் நேரத்திலேயே 'குடி'மகன்கள் திறந்தவெளி பாராக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், பயணியர் ரோட்டில் நின்று பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது.

மேலும், பஸ் ஸ்டாண்டிற்கு உள்ளேயும், வெளியேயும் மது பாட்டில்கள் தான் அதிகமாக காணப்படுகிறது. இதனால், பஸ்சிற்காக காத்திருக்கும் பயணியருக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு, நிழற்கூரைகளில் அத்துமீறும் 'குடி'மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us