sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 சுற்றுலா வாகனங்களால் நெரிசல்; தீர்வு காண மக்கள் வலியுறுத்தல்

/

 சுற்றுலா வாகனங்களால் நெரிசல்; தீர்வு காண மக்கள் வலியுறுத்தல்

 சுற்றுலா வாகனங்களால் நெரிசல்; தீர்வு காண மக்கள் வலியுறுத்தல்

 சுற்றுலா வாகனங்களால் நெரிசல்; தீர்வு காண மக்கள் வலியுறுத்தல்


ADDED : டிச 30, 2025 07:06 AM

Google News

ADDED : டிச 30, 2025 07:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை: வால்பாறையில் திரண்ட சுற்றுலா பயணியரின் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வால்பாறையில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் குளுகுளு சீசன் நிலவுகிறது. பள்ளிகள் அரையாண்டு தேர்வு விடுமுறை, தொடர் அரசு விடுமுறை காரணமாக, வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் அதிகம் வருகின்றனர்.

சுற்றுலா பயணியர், சக்தி - தலனார் செல்லும் ரோட்டில் உள்ள வியூ பாயின்ட், சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, நல்லமுடி காட்சி முனை, சின்னக்கல்லார் அருவி, சோலையாறு அணை, அட்டகட்டி ஆர்கிட்டோரியம் உள்ளிட்ட பகுதிகளை கண்டு ரசிக்கின்றனர்.

குறிப்பாக, சிறுகுன்றா கூழாங்கல்ஆறு, சின்னக்கல்லாறு அருவியில் சுற்றுலா பயணியர் குளித்து மகிழ்கின்றனர். இதனால், தங்கும் விடுதிகள் அனைத்தும் ஹவுஸ் புல்லாக உள்ளன. சுற்றுலா வாகனங்கள் 'பார்க்கிங்' செய்ய போதிய இடவசதி இல்லாத நிலையில், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சுற்றுலா பயணியர் கூறியதாவது:

வால்பாறை நகரில் வாகனங்கள் அதிகளவில் வந்து செல்லும் நிலையில், 'பார்க்கிங்' வசதி இல்லாததால், அவதிக்குள்ளாகிறோம். நகராட்சி சார்பில் படகு இல்லம், பூங்கா உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் 'பார்க்கிங்' செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வால்பாறை நகரில் வாகன நெரிசலை தவிர்க்க கார் 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்த நகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களையும், ஆக்கிரமிப்புகளையும் போலீசார் அப்புறப்படுத்த வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us