sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'மாற்றுத்திறனாளிகளுக்கும் சம வாய்ப்பு அளிக்க வேண்டும்'

/

'மாற்றுத்திறனாளிகளுக்கும் சம வாய்ப்பு அளிக்க வேண்டும்'

'மாற்றுத்திறனாளிகளுக்கும் சம வாய்ப்பு அளிக்க வேண்டும்'

'மாற்றுத்திறனாளிகளுக்கும் சம வாய்ப்பு அளிக்க வேண்டும்'


ADDED : அக் 21, 2024 11:48 PM

Google News

ADDED : அக் 21, 2024 11:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: ''மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்,'' என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி விஸ்வநாதன் பேசினார்.

மாற்றுத்திறனாளி கலைஞர்களின், 12 புகைப்படங்கள் இடம்பெற்ற 2025ம் ஆண்டுக்கான, 'நான் சிறப்பு மிக்கவன்' என்ற காலண்டர் வெளியீட்டு விழா, சுவர்கா அறக்கட்டளை சார்பில், கோவை ரெசிடென்சி ஓட்டலில் நடந்தது. சுப்ரீம் கோர்ட் நீதிபதி விஸ்வநாதன், காலண்டரை வெளியிட்டார்.

அப்போது அவர்பேசியதாவது:

மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டத்தில், பல்வேறு அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. மற்றவர்களை போல, மாற்றுத்திறனாளிகளுக்கு சமமான வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக, சுப்ரீம் கோர்ட் பல்வேறு தீர்ப்புகளை அளித்துள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில், 97 சதவீதம் மார்க் பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர், நீட் தேர்வு எழுதினார்.

நீட் தேர்விலும் தேர்ச்சி பெற்றும், மாற்றுத்திறனாளிகளுக்கான உடற்தகுதி, 45 சதவீதத்திற்கு குறைவாக இருந்ததால், அவருக்கு மருத்துவ கல்வி படிப்புக்குஇடம் கிடைக்கவில்லை. இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. விசாரணை நடத்தி, அவரது திறமை மற்றும் மார்க் அடிப்படையில், மருத்துவ படிப்புக்கு அட்மிஷன் கொடுக்க வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளிக்கான உடற்தகுதி சதவீதத்தை கணக்கில் எடுக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது. தற்போது அந்த மாணவர், லாகூர்மருத்துவ கல்லுாரியில் படிக்கிறார். மாற்றுத்திறனாளிகளின்திறமைக்கு ஏற்ப, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உரிய வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு, நீதிபதி விஸ்வ நாதன் பேசினார்.

சுவர்கா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுவர்ணலதா, பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் மற்றும்பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us