ADDED : மார் 04, 2024 12:48 AM
அ நிறம் | அளவு
கோவை;பிளஸ்2 தேர்வுகளை தொடர்ந்து, இன்று முதல் பிளஸ்1 மாணவர்களுக்கும் பொதுத்தேர்வுகள் துவங்குகிறது.
கோவையில், 127 தேர்வு மையங்களில் 363 பள்ளிகளை சேர்ந்த, 35,975 மாணவர்கள் இதில் பங்கேற்கின்றனர். தனித்தேர்வர்களாக, 364 பேர் தேர்வை எதிர்கொள்ளவுள்ளனர்.
தேர்வுகளில் முறைகேடுகளை தவிர்க்கும் வகையில், மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில், 2,830 பேர் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிளஸ்1 தேர்வு இன்று முதல் வரும், 25ம் தேதி வரை நடைபெறுகிறது. காலை, 10:00 முதல் மதியம் 1:15 மணி வரை தேர்வுகள் நடைபெறும்.
