/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்று வெளியாகிறது பிளஸ் 2 ரிசல்ட்; மாநில ரேங்க் எதிர்பார்க்கும் கோவை
/
இன்று வெளியாகிறது பிளஸ் 2 ரிசல்ட்; மாநில ரேங்க் எதிர்பார்க்கும் கோவை
இன்று வெளியாகிறது பிளஸ் 2 ரிசல்ட்; மாநில ரேங்க் எதிர்பார்க்கும் கோவை
இன்று வெளியாகிறது பிளஸ் 2 ரிசல்ட்; மாநில ரேங்க் எதிர்பார்க்கும் கோவை
ADDED : மே 08, 2025 01:04 AM

கோவை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு இன்று வெளியாகிறது. மாநில அளவில் சென்றாண்டு நான்காமிடத்தை பிடித்த நிலையில், இம்முறை கோவை மாவட்டம் முதலிடத்தைப் பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கோவை கல்வி மாவட்டத்தில், 1,387 பள்ளிகள் உள்ளன. 2024-25ம் கல்வியாண்டில், 16,353 மாணவர்கள், 18,941 மாணவிகள் மற்றும், 649 தனித்தேர்வர்கள் என, 35,294 பேர் தேர்வெழுதினர். கடந்தாண்டு, 33,399 பேர் தேர்வு எழுதினர்; இந்தாண்டில் தேர்வெழுதிய மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
இன்று, காலை, 9:00 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளுக்குச் சென்று தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளியில் சமர்ப்பித்த மொபைல் போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கும் குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும். மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து, 'டிஜிலாக்கர்' வழியாக பதிவிறக்கம் செய்யலாம்.
தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in மற்றும் www.inresults.nic.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். மறுதேர்வு அறிவிப்பு, விடைத்தாள் நகல், மதிப்பெண் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு தொடர்பான விவரங்கள் தேர்வு முடிவு வெளியானதும் அறிவிக்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

