ADDED : மார் 01, 2024 01:36 AM
கோவை;மின் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து பாரதிய மஸ்துார் சங்கத்தினர் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாரதிய மஸ்துார் சங்கத்தின், மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கோபால் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், பொது மக்களையும், குறு, சிறு தொழில் நிறுவனங்களையும் நிதி சுமைக்கு ஆளாக்கும் மின் கட்டண உயர்வை தமிழக அரசு 'வாபஸ்' பெற வேண்டும். அரசு ஊழியர் அனைவருக்கும் பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.
மாவட்ட அமைப்பு செயலாளர் முருகேசன், துாய்மை பணியாளர் பிரிவு மாவட்ட இணை அமைப்பு செயலாளர் ஸ்டாலின் பிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.

