sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 பிரதமர் வருகை; வாகனங்கள் நிறுத்த விமான நிலையத்தில் கட்டுப்பாடு

/

 பிரதமர் வருகை; வாகனங்கள் நிறுத்த விமான நிலையத்தில் கட்டுப்பாடு

 பிரதமர் வருகை; வாகனங்கள் நிறுத்த விமான நிலையத்தில் கட்டுப்பாடு

 பிரதமர் வருகை; வாகனங்கள் நிறுத்த விமான நிலையத்தில் கட்டுப்பாடு


ADDED : நவ 17, 2025 02:05 AM

Google News

ADDED : நவ 17, 2025 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: பிரதமர் வருகையை முன்னிட்டு, கோவை சர்வதேச விமான நிலையத்தில் வாகன நிறுத்தத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தென்னிந்திய இயற்கை கூட்டமைப்பு சார்பில், வரும் 19ம் தேதி முதல் 3 நாட்களுக்கு, கோவை கொடிசியா வளாகத்தில் இயற்கை விவசாயிகள் மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கவுள்ளார்.

இதற்காக வரும், 19ம் தேதி மதியம் 12.30 மணிக்கு கோவை வருகிறார் பிரதமர். மாலை 3:30 மணிக்கு திரும்பி செல்கிறார்.

பிரதமர் வருகையை முன்னிட்டு, வரும் 20ம் தேதி வரை விமான நிலைய முனையம் மற்றும் 'ஒய்' சந்திப்பில், இரவில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறும் வாகனங்கள் அப்புறப்படுத்துவதுடன், அபராதமும் விதிக்கப்படும். நாளை காலை 6:00 முதல், வரும், 19ம் தேதி காலை 6:00 மணி வரை, இந்த தடை இருக்கும். மூன்று நிமிடங்களுக்குள் பயணிகளை ஏற்றி, இறக்க தடையில்லை.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்நடைமுறை பின்பற்றப்படுவதாகவும், பயணிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும், விமான நிலைய நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us