/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்சோ வழக்கு கைதிக்கு 'குண்டாஸ்'
/
போக்சோ வழக்கு கைதிக்கு 'குண்டாஸ்'
ADDED : செப் 07, 2025 09:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவைபுதுார் பகுதியை சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவர், சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்தது தொடர்பாக கடந்த 5ம்தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை, எடுக்க மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, கார்த்திக் ராஜாவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் உத்தரவிட்டார். இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ள கார்த்திக் ராஜாவிடம் உத்தரவு நகல் வழங்கப்பட்டது.