sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 புகையிலை பொருட்கள் விற்பனைஅமோகம் போலீசாரின் அதிரடி அவசியம்

/

 புகையிலை பொருட்கள் விற்பனைஅமோகம் போலீசாரின் அதிரடி அவசியம்

 புகையிலை பொருட்கள் விற்பனைஅமோகம் போலீசாரின் அதிரடி அவசியம்

 புகையிலை பொருட்கள் விற்பனைஅமோகம் போலீசாரின் அதிரடி அவசியம்


ADDED : டிச 05, 2025 07:04 AM

Google News

ADDED : டிச 05, 2025 07:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை அமோகமாக நடக்கிறது.

குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. விற்பனையில் ஈடுபடும் கடைக்கு அபராதமும், மீறி விற்பனை செய்யும் கடையின் உரிமத்தை ரத்து செய்யவும், மீண்டும் விற்பனையில் ஈடுபட்டால் கடையை பூட்டி 'சீல்' வைக்கும் நடவடிக்கையிலும் போலீசார் மற்றும் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால், சமீப காலங்களாக போலீசார் மற்றும் சுகாதார துறையினரின் பிடி விலகியதால், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

கடந்த, 2013ம் ஆண்டு மே மாதம் தமிழக அரசு குட்கா, பான் மசாலாவுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்த தடை ஆண்டுதோறும் நீடிக்கப்படுகிறது. தடை அமல் உள்ள நிலையில் சிறு கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தடையின்றி விற்பனை ஆகிறது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் குட்கா, பான் மசாலா உள்ளிட்டவைகளை பயன்படுத்துவது அதிகமாகி விட்டது. இதனால் மறைமுகமாக விற்பனை செய்வது கோவை புறநகர்களில், குறிப்பாக, பெரியநாயக்கன்பாளையம் வட்டாரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகரித்து விட்டது.

பெரும்பாலான சிறு கடைகளில் குட்கா, பான் மசாலா உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், ரெகுலர் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. புதிதாக வரும் அறிமுகம் இல்லாத நபர்களுக்கு விற்பனை செய்வதில்லை. மொத்த வியாபாரிகளிடம் வாங்கும் சில்லறை வியாபாரிகள், ஒவ்வொரு பாக்கெட்டுக்கும், 40 முதல், 50 ரூபாய் வரை அதிக விலை வைத்து விற்பனை செய்கின்றனர்.

ஒரு பாக்கெட்டின் ஒரிஜினல் விலை, 15 முதல், 20 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், அவற்றை, 40 முதல், 60 ரூபாய் வரை அதிகம் வைத்து விற்பனை செய்கின்றனர்.

போலீஸ் கண்காணிப்பு அதிகரித்தால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை அடியோடு தவிர்த்து விடுகின்றனர்.

போலீசார் அல்லது சுகாதார துறையினர் குறிப்பிட்ட பகுதியில் அதிரடி சோதனை நடத்த வருகின்றனர் என்பதை அந்தந்த துறை சார்ந்த சிலர் வியாபாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிப்பதால், போலீசாரின் நடவடிக்கையில் இருந்து தப்பி விடுகின்றனர்.

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'கடையில் உள்ள பிற பொருள்களை விற்பனை செய்வதற்காக, குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை விற்பனை செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. போலீசார் இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என்றனர்.

போலீசாரும், சுகாதார துறையினரும் மீண்டும் சாட்டையை சுழற்றினால் மட்டுமே பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.






      Dinamalar
      Follow us